.

இதுவரைக்கும் வந்தவா

come and enjoy the function.

Showing posts with label பூம்புகார். Show all posts
Showing posts with label பூம்புகார். Show all posts

Wednesday, May 4, 2011

தேரோடும் வீதியிலே மாதவியின் வீடு


பூம்புகாரில் கோவலன் வாழ்ந்தான் என வரலாறு சொல்கிறது.   மாதவியின் வீடு திருக்கடையூரில்  தேரோடும் வீதியில் உள்ளது. தற்போது இவ்வீடு பாழடைந்த நிலையில் உள்ளது.  கருவி எனும் ஊரின் வழியாய் வந்தால் பத்து கிலோமீட்டர்தான்.  மாட்டு வண்டி பூட்டி வந்திருக்கலாம்.   1983 ல் நான் என் நண்பரோடு வந்தபோது ஆக்கூர் உறவினர் வீட்டிலிருந்து மாட்டுவண்டி கட்டித்தான் வந்தேன் எனும்போது நானூறு வருடம் முன் மாட்டுவண்டி என்பது பொய்யாய் இருக்க முடியாது.   சிலப்பதிகாரம் என்பது உண்மைதான் என்பதற்கு சாட்சியாய் இப்போதும் கோபாலன் எனும் பெயர் நகரத்தாரிடையே இருப்பதும், அவர்கள் சாந்தி செய்து கொள்ளும் பழக்கமும்,( மற்ற சாதியினர் சாந்தி செய்து கொள்ளும் பழக்கம் பின்னாளில்தான் வந்தது), மாதவியின் வீடு இப்போதும் தேரோடும் வீதியிலே இருப்பதும் சான்றுகளாய் உள்ளன.